Translate

Monday, May 21, 2018

மக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும்




வசதியிருக்கிறவன் தரமாட்டான் - அவனை

வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்

 

  • இந்த வரிகள் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு திரைப்படப்பாடலில் எழுதியது.

இந்த வரிகளை ஒரு நூலில் வாசித்தபோது

என் நினைவு புத்தகம் தன் பழைய பக்கங்களை புரட்டி பார்த்தது .

சில வருடங்களுக்கு முன் நான் பார்வையாளனாக கலந்து கொண்ட ஒரு

கவிதை நூல் வெளியீட்டு விழா ……

விழாவின் நாயகன் அந்த  கவிதை நூலின் ஆசிரியர் தொல் .திருமாவளவன் .

அந்த நிகழ்வில் பலத்த ஆரவாரங்களுக்கிடையில் ,


"சிங்கள இனவெறியர்கள் ஈழ தமிழர்களுக்கான உரிமைகளை ஒரு போதும் தரமாட்டார்கள் .

எங்கள் உரிமைகளை பெறாமால் ஒரு போதும் அவர்களை விடமாட்டோம் "

என்று அனல் தெறிக்க

உணர்ச்சி கவிஞர் .காசி ஆனந்தன் சூளுரைத்தார் .

எப்படி இருவரும் ஒரே மாதிரி சிந்தித்தார்கள் ?

என்று எண்ணி வியக்கிறேன்.

கவிஞன் என்பவன் தனி மனிதன் அல்லன் .

ஒரு மாபெரும் மக்கள் தொகுதியின் ஒற்றை குரல் என்ற புரிதலே

அந்த புதிரான கேள்விக்கான பதிலாக பார்க்கிறேன் .

No comments:

Post a Comment