Translate

Tuesday, February 10, 2015

இமயத்திற்கு பொன்னாடை

 சில வருடங்களுக்கு முன்பு  கவிஞர் மு.மேத்தாவை சந்தித்து
அவருடைய திரைபடபாடல்களை
நான் திறனாய்வு செய்து இருப்பது குறித்து பேசிகொண்டிருந்தேன்.
நான் எழுதி இருந்த கட்டுரைகளை படித்து பார்த்த கவிஞர்
என் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு  
கட்டுரைகள் குறித்து சில விளக்கங்களை என்னிடம்
கேட்டார்.
ஓங்கும் உந்தன் கைகளால் வானை புரட்டி போடு
புது வாழ்வின் கீதம் பாடு
என்றுதானே எழுதிருந்தேன்
தூங்கும்உந்தன் கைகளால் வானை புரட்டி போடு
புது வாழ்வின் கீதம் பாடு
 என்று வரிகளை குறிப்பிட்டு இருக்கிறீர்களே
என்று கேட்டார்
பாட்டு புத்தகத்தில் அவ்வாறு இருப்பதை நான்
சொன்னேன்.
கவிஞரின் திரைப்பட பாடல்கள் தொகுப்பு நூல்
ஓன்று 1996 நர்மதா பதிப்பக நூலாக
வந்துள்ளது.
ஆனால் நான் குறிப்பிட்ட சூரிய வம்சம் படத்தில் 
இடம்பிடித்த நட்சத்திர ஜன்னலில் என தொடங்கும்
பாடல் 1996 க்கு பிறகு என்பதால் அதில் இல்லை.
எனவே நடைபாதைகளில் விற்கும் அந்தந்த
திரைப்படங்களின் சிறு அச்சு நூலை நான்
வாங்கி இருந்தேன்
அதில்தான் கவிஞர் குறிப்பிட்ட இந்த பிழை
கவிஞரை சந்தித்து வந்த பின்பு சில நாட்களில்  வேறு 
ஒரு அச்சு பிழையை கண்டுபிடித்தேன்.
பொன்னாடை இமயத்திற்கு போர்த்திவிடலாம்
என்றுதான் கவிஞர் எழுதி இருந்தார்.
ஆனால் அந்த சிறு அச்சு நூலில் 
பொன்னாடம் இமயத்திற்கு போர்த்திவிடலாம்
என்று வரிகளை பிழையாக குறிபிட்டு  இருந்தார்கள்
திருக்குறளுக்கு நான்  உரை எழுதுவது என்பது
இமயத்திற்கு பொன்னாடை போர்த்திவிடுவதை போன்றது
என்று தலைவர் கலைஞர் சொன்னதாக
கவிஞர் ஒரு நேர்காணலில் 
குறிப்பிட்டு இருந்தார்
அந்த பாதிப்பிலேயே அந்த உவமையை  கையாண்டதாகவும்
சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்குறீர்கள் என்று
கலைஞரே பாராட்டியதாகவும் கவிஞர் மேத்தா அந்த
நேர்காணலில் சொல்லிருந்தார்.
அந்த நேர்காணலை படித்த போதே இதையும் 
கண்டுகொண்டேன்
திரைப்படங்களில் கருத்துள்ள பாடல்கள் அமைவதே அரிது.
அப்படி அமைந்த நல்ல பாடலையும் அச்சு பிழை 
செய்தே இப்படி கொலை செய்கிறார்களே என்று
வருந்தினேன்