Translate

Tuesday, January 27, 2015

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு ,

ஒரு நன்றி



என் பள்ளிநாட்களில் நண்பர்களை பிரியநேரும்போது மிகவும் 
மனம் நொறுங்கி போவேன்.
மணப்பாறையில் இருந்து எங்கள் குடும்பம் திருச்சிக்கு 
இடம் பெயர்ந்த போது ஆரம்ப பள்ளி நண்பர்களை பிரியநேர்ந்தது.
ஏதோ உலகமே இருண்டு விட்டதை போன்ற உணர்வு.
உலகமே அழிந்து விட கடைசியில் மாட்டிகொண்ட ஒற்றை 
மனிதனின் மனதவிப்பு.
இன்னும் எப்படி எப்படியோ வர்ணிக்கலாம்
என் மன வேதனைகளை படம் பிடிக்க
அந்த வார்த்தைகளுக்கெல்லாம் போதுமான சக்தி இல்லை 
ஆனால் இவையெல்லாம் திரு.அகத்தியன் அவர்களின் 
விடுகதை படம் பார்க்கும் வரையில் தான்.
அந்த படத்தின் நாயகி தன் தந்தையை இழந்துவிட
அறிவுரை கூறும் ஜனகராஜ் எல்லா உறவுகளுக்கும்
ஒரு ஓய்வு காலம் உண்டு
அதற்கு பின்பு அந்த இடத்தை இன்னொருவர் 
நிரப்புவர் என்ற வசனமே இன்றளவும் பிரிவு
பெருந்துயரை தாங்கும் மாமருந்தாக
எனக்கு உள்ளது.
அந்த வசனத்தை எனக்கு ஒரு வரமாக வழங்கிய
திரு. அகத்தியன் அவர்களுக்கு என் நன்றி.



 

No comments:

Post a Comment