Translate

Sunday, December 28, 2014

புதிய தரிசனம்

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
மீண்டும் தர்மம் வெல்லும்
சிறிது கால இடைவேளைக்குப்பின்
தர்மத்தின் வாழ்வுதன்னை 
மறுபடியும்
சூது கவ்வும்

Saturday, November 29, 2014

கல்வெட்டு

தொலைந்து விட்டது
ஆரம்ப நாட்களில்
நான் எழுதிய கவிதைகள்
மறக்கவில்லை
நீ
பாராட்டிய வரிகள் மட்டும்

Wednesday, August 20, 2014

காத்து வீசுது


இயக்குனர்மனோபாலா"மனதோடு மனோ" நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு
பேசும்போது 
கவிஞர் மு.மேத்தாவை திரை உலகிற்கு அறிமுகம் செய்தது தான்தான் என்று கூறினார்.
அவர் கூறிய தகவல் தவறானது.
கவிஞரின் கல்லூரி கால நண்பர் உ.சுப்ரமணியனின் தந்தையர்
நாடக உலகின் சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட உடையப்பா

தயாரித்த அனிச்ச மலர் என்ற படத்தின் மூலமே திரை  உலகிற்கு வந்தார்


அதன் பின்பே மனோபாலா இயக்கிய ஆகாய கங்கை படத்தில்
இசைஞானி இசையில் பாடல் ( தேனருவில் நனைந்திடும் மலரோ)
எழுதினார்
அதுவும் பாலகுமாரன் மூலமாக கமல் ஹாசனை சந்தித்து பின்பு 
இசைஞானியின்  அறிமுகம் கிடைத்ததாக கவிஞரே 
தன் நேர்காணல்களின் தொகுப்பு நூலில் (இதய வாசல் , திறந்த புத்தகம்)
 
குறிபிடுகிறார்.
கவிஞர் மு. மேத்தா தன் முதல் திரைபட பாடல் அனுபவத்தை பற்றி 
கூறும் போது,



என் கல்லூரி கால நண்பர் உ. சுப்ரமணியன் தன் தந்தை திரைப்படம்
தயாரிப்பதாகவும் அதில் நீங்கள் பாடல் எழுத வேண்டும் என்று 
அவர் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
எனக்காக காத்திருந்து பின்பு தன் காரில் அழைத்து சென்றார்.
அந்த கார் ஒரு பட நிறுவனத்தின் வாசலில் போய் நின்றது.
.
அங்கே எனக்கு ஒரு பெரிய ரோஜா பூ மாலையை கழுத்தில் போட்டு,
இவர்தான் நம் கவிஞர் என்று சங்கீத இரட்டையர்கள் சங்கர் -கணேஷ்
அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தார் உடையப்பா என்கின்ற அந்த 
உன்னதமான மனிதர் 



என்று கவிஞர் மு.மேத்தா நன்றி பெருக்கோடு நினைவுகூறுகிறார்.
மனோபாலா விபரம் அறியாமல் கூறி இருந்தாலும்,
இது ஒன்றும் இமாலய தவறு இல்லை என்றாலும்,
கவிஞர் மு.மேத்தாவின் நன்றி உணர்வையும், உடையப்பா அவர்கள் கவிஞரின் 
மீது கொண்டிருந்த பற்றுதலையும், அன்பையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்
என்ற ஆவலின் காரணமாகவே இந்த உண்மைகளை பதிவு செய்கிறேன்.
காத்து வீசுது
ஹே காத்து வீசுது 
வயல் வெளியில் நெற்கதிரும்
காதல் பேசுது
செல்லமா பொன்னம்மா 
உன் மேல ஆசை வந்ததம்மா 
என்பதே அந்த பாடலின் 
ஆரம்ப வரிகள்.
பாடலை பாடியவர்கள் 
வாணி ஜெயராம் ; மலேசிய வாசுதேவன்

Thursday, July 17, 2014

எரிமலையில் ஒரு குளிர் அருவி




தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

உலகம் எங்கும் விரவியுள்ள தமிழீழ மக்கள் அப்போராட்டத்தை

சர்வ தேச சமூகத்தின் கரங்களை நோக்கி தொடர்ந்து நகர்தியவண்ணம் உள்ளனர்.


இந்த நிலையில் நின்று கொண்டு பின்னோக்கி பார்க்கையில்

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திடமான

ஆயுத போராட்டத்தை நடத்திய புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் என்ற

மாபெரும் தலைவனை பற்றிய சிந்தனை தவிர்க்க முடியாதது

நெருப்பு முனையில் நின்று கொண்டு கடும் போரட்டத்திற்கு நடுவிலும் அவர்


வாழ்கையில் நகைச்சுவை உணர்வை எப்படி காப்பற்றி வந்தார் என்பது எனக்கு பெரும் வியப்பே.

அதற்கு சான்றாக ஒரு நிகழ்வு.


ஒருமுறை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திருமாவளவன்

அவர்கள் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்ற போது ஒரு விருந்திற்கு

ஏற்பாடு செய்துள்ளார். அப்பொழுது விருந்து பரிமாறுபவரை திருமாவிற்கு கோழி இறைச்சி

பரிமாற கூறியுள்ளார்.


இதை கேட்ட திருமா ,

அண்ணா ! நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கூறியுள்ளார்.

திருமாவின் இந்த வார்த்தைகளை கேட்ட பிரபாகரன்,

ஒ! இது சைவ சிறுத்தையோ? என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.


சிங்கள இன வெறி என்னும் நெருப்பு வளையத்தில் நின்று போராடிகொண்டிருந்த வேளையிலும்

அவரின் நகைச்சுவை உணர்வு என்னை மலைக்க வைத்தது.


Friday, June 27, 2014

அவள்

உன் கூந்தல் 
பகலை பழிக்கும் இருட்டு
 
உன் கண்களால் 
பருவ மனங்களின் திருட்டு
உன் கூந்தல் 
பகலில் தோன்றிய இரவு
உன் கண்களால் 
பருவ மயக்கங்கள் என்னுள் வரவு
உன் கூந்தல் 
அசைந்தாடும் கடலலையின் அழகு
உன் கண்களால் 
என் மனம் ஓர் உதிர்ந்த இறகு
உன் கூந்தல் 
கருப்பு கவிதைகளால் ஆன தொகுப்பு
உன் கண்களால் 
நடக்கிறது ஒரு காதல் வகுப்பு
நீ உறவை கொடுக்கும் உறவு
உன் கண்கள் நம் உயிர்களை பிணைக்கும் கயிறு
மொத்தத்தில் நீ ஒரு
அழகின் அணிவகுப்பு 
உனக்கான இந்த 
கவிதை என் கைகுவிப்பு

Thursday, June 26, 2014

சுயதரிசனம்


நல்ல அமைதி வந்து 
குடிபுகும் உன் மனதில்

நல்ல மலர்களால் நிறைந்துவிடும்
உன் வீட்டு கொல்லை

பட்டினத்தான் வாழ்ந்த 
வீடு மேற்குப்புறத்தில்

பண்ணை புரத்தான்  பாட்டு
வரும் கிழக்கில் இருந்து


வெட்ட வெட்ட 
மடிந்து விழும் இலையும் கிளையும் 
வீசும் காற்றில் ஈரம் கோர்க்க
மீண்டும்  துளிர்த்து வரும்
யாருமற்ற பாலை நிலமே 
வாழ்கை என்று எண்ணிவிடாதே
சொந்தமில்லா சொந்ததில்தான் 
வசந்தம் வரும் மறந்துவிடாதே
பணத்தை வைத்து 
பிணத்தை எழுப்ப முடியாதே 
பணமே  இல்லை என்றால்
பிணம் கூட சுடுகாடு சேராதே 

பழந்தமிழ் இலக்கியங்கள்

நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய நாட்களில் எல்லோருக்கும்
புரியவில்லை கூறுவோர் உண்டு .
அந்த கூற்று உண்மையும் கூட
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை சொன்னார்


பேரா.சோ.சத்தியசீலன்
நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கண்டால் ஒரு இருநூறு
பழந்தமிழ் வார்த்தைகள் மட்டுமே இன்றைய காலத்திற்கு  அன்னியமாக இருக்கும்




அதற்கு மட்டும் ஒரு பொருள் அகராதி உருவாக்கினால் போதும்
நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் 

இன்றைய மக்களிடம் கொண்டு சேர்த்து விடலாம்

Wednesday, June 25, 2014

ஹைக்கூ - 4

இறந்து போன தலைவனுக்காக
மௌன அஞ்சலி செலுத்தும் வேளை
பறவைகளின் குதூகல ஒலி

ஹைக்கூ - 3

கருப்பு வண்ண சேலையில் இருந்து 
நழுவி செல்லும் பூக்கள்
நதியின் மீது ததும்பும் மரத்தின் நிழல்

ஹைக்கூ -2

பகலின் நினைவுகளே
நான் அந்த பாதையில் செல்கையில்
வழித்தடம் காட்டும் கைவிளக்கு

Tuesday, June 24, 2014

ஆப்கானிஸ்தானும் இலங்கையும்

ஆப்கானிஸ்தானும் இலங்கையும்
புத்தனின் சிலையை
சத்தத்தால்
நொறுக்கினார்கள்
பீரங்கி சத்தத்தால்
நொறுக்கினார்கள்
புத்தனின் சிலையை
இரத்தத்தால்  
குளிபாட்டினார்கள்


 
தமிழர்களின் இரத்தத்தால் 
குளிபாட்டினார்கள்
புன்னகை பூத்தான்
புத்தர் பெருமான்
 
அற்ப மானிட பதர்களை
எண்ணி!

Wednesday, March 26, 2014

ஹைக்கூ -1

சித்திரை மாத வெயில்



ஆற்று பாலத்தை கடந்து செல்கையில் கண்ணில் படுகிறது



அம்மாவை எரியூட்டிய மயானம்





Thursday, January 2, 2014

ஹைக்கூ மொழிபெயர்ப்பு - 1

நான் மொழிபெயர்த்த சில ஹைக்கூ கவிதைகளை
உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.
உங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.




கவிஞரின் பெயர்
yutaka hasegawa

சாப்பாடு உள்ள

பாத்திரத்தை திறந்திடு

கொறிக்கும் விலங்கை கண்டுகொள்ள


குளிர்ந்த வசந்த காலம்


பலசரக்கு கடையில்

பாம்பு கடவுளின் படங்கள் விற்று தீர்ந்தது


கவிஞரின் பெயர்
Kazumi Cranney

நடு இரவில்
நண்பனின் மரணம்
ஆரவாரமற்ற குளிர்காலமழை


காட்டு திராட்சை பழங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக பழுக்கின்றன
பச்சை நிறத்துடனும் கருஞ்சிவப்பு நிறத்துடனும்