Translate

Wednesday, October 30, 2013

சிலைகள் பேசினால் ...



சிலைகள் பேசினால் ...


என்

கொள்கைகளை எல்லாம்

காற்றில் பறக்க விட்டு விட்டு

என் சிலைக்கு மட்டும்

மாலையிடும் உங்களை விடவும்

எச்சமிடும் பறவைகள்

எவ்வளவோ மேல்.

Monday, October 28, 2013

வானத்திலே திருவிழா

ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தை பருவத்தை
மறந்து விடமுடியாது

கவலைகள் ஏதுமின்றி வானம்பாடிகளை போலே
நாம் பறந்து திரிந்த காலங்கள் அவை.

வயதுகள் ஏற ஏற பொறுப்புகளும்,பொருளாதார
சுமைகளும் நம்மை அழுத்துகின்றன.

மீண்டும் அந்த ஆரம்பபள்ளி நாட்களுக்கு ...

நாம் ஊஞ்சல் ஆடிய பழைய தொட்டிலுக்கு ...

ஒரு மீள் பயணம்.

அங்கே நம் மனகுகை ஓவியங்களில்தான்

எத்தனை எத்தனை வண்ண வண்ண

ஓவியங்கள்

கால கரையான் அரிககாமலும்,எண்ண தூசிகள்
படியாமலும் ஒரு சிலரால்தான் அந்த ஓவியங்களை

பாதுகாக்க முடிகிறது.


அந்த வகையிலே இந்த குழந்தை இலக்கிய கவிதை

என் ஆரம்பபள்ளி நாட்களில் நான் தமிழ் பாட

நூலில் படித்தது.

சுவைத்தது.

இந்த கவிதையை எழுதியவர் கவிஞர் பொன்.செல்வ கணபதி.


கவிஞர் மு.மேத்தா உடன் பணியாற்றிய பேராசிரிய
நண்பர்.


சென்னை தலை நகரம்
மட்டும் அல்ல

சிலை நகரமும் கூட

இங்கேதான் தலைவர்கள்

சிலைகளில் கூட பேசிக்கொண்டு இருக்கிறார்கள்


உழைப்பாளிகள்

உழைத்து கொண்டு இருக்கிறார்கள்

என்ற அற்புதமான கவிதை வரிகளை படைத்த
முற்போக்கு கவிஞர்.

அந்த கவிதை இதோ...

வானத்திலே திருவிழா

வழக்கமான ஒருவிழா

இடிஇடிக்கும் மேளங்கள்

இறங்கி வரும் தாளங்கள்


மின்னல் ஒரு நாட்டியம்

மேடை வான மண்டபம்

தூறல் ஒரு தோரணம்

துய மழை காரணம்


எட்டு திசை காற்றிலே

ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெல்லாம் வெள்ளமே

திண்ணை ஓரம் செல்லுமே


தவளை பாட்டு பாடுமே

தண்ணீரிலே ஆடுமே

Sunday, October 27, 2013

தொலைவில் ஒரு சகோதரன் -1

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில்

ஒரு பெயர் அறியாத சகோதரன்

அவன் விட்டின் முன்னே

நிற்கும் புகை படம்

கூகிள் மாப்சில் பார்கிறேன்

என் வீட்டில் இருந்தபடியே


உள்ளம்கையில் உலகம்
வந்ததாய் என் மனம் துள்ள

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

கணியன் பூங்குன்றனின் வரிகளில்

என் இதயம் நனைய



"வானத்துக்கு கிழே எல்லோரும்
வாழ்கிறோம் "

என்று தன் கவிதை கரங்களால்
உலக மக்களை எல்லாம்
அணைத்துகொண்ட கவிஞர் நா.காமராசனின்
வரிகளில் என் மனம் சிலிர்க்க


ஒரு நொடிதான்
இவையெல்லாம்

யார் அவன் ?
பெயர் என்ன ?

வீட்டின் கதவை திறக்கிறானா ?
வீட்டின் கதவை பூட்டுகிறானா ?

திருமணம் ஆனவனா ?
அனபானவளா அவன் மனைவி ?

எம் ஈழதமிழரின் வேதனையை
நான் உரைத்தால்

காது கொடுப்பானா ?

அவர்தம் கண்ணீர் துடைக்க
கை கொடுப்பானா ?

கேள்விகளால் நான்

கிழிக்கப்பட
வெகு தொலைவில் சென்றுவிட்டான்

அந்த பெயர் அறியாத சகோதரன்

மீண்டும்.

தொலைவில் ஒரு சகோதரன்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில்

ஒரு பெயர் அறியாத சகோதரன்

அவன் விட்டின் முன்னே

நிற்கும் புகை படம்

கூகிள் மாப்சில் பார்கிறேன்

என் வீட்டில் இருந்தபடியே



உள்ளம்கையில் உலகம்
வந்ததாய் என் மனம் துள்ள

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

கணியன் பூங்குன்றனின் வரிகளில்

என் இதயம் நனைய



"வானத்துக்கு கிழே எல்லோரும்
வாழ்கிறோம் "

என்று தன் கவிதை கரங்களால்
உலக மக்களை எல்லாம்
அணைத்துகொண்ட கவிஞர் நா.காமராசனின்
வரிகளில் என் மனம் சிலிர்க்க


ஒரு நொடிதான்
இவையெல்லாம்

யார் அவன் ?
பெயர் என்ன ?

வீட்டின் கதவை திறக்கிறானா ?
வீட்டின் கதவை பூட்டுகிறானா ?

திருமணம் ஆனவனா ?
அனபானவளா அவன் மனைவி ?

எம் ஈழதமிழரின் வேதனையை
நான் உரைத்தால்

காது கொடுப்பானா ?

அவர்தம் கண்ணீர் துடைக்க
கை கொடுப்பானா ?

கேள்விகளால் நான்

கிழிக்கப்பட
வெகு தொலைவில் சென்றுவிட்டான்

அந்த பெயர் அறியாத சகோதரன்

மீண்டும்.