Translate

Sunday, September 22, 2013

Thursday, August 29, 2013முகவரிகள்


மகாகவி சுப்ரமணிய பாரதி
நத்தையாக கூட்டுக்குள்
ஒடுங்கிய அடிமை இந்தியருக்குள்
அடங்க மறுத்து
பறவையாகி சிறகை
விரித்தவன்


புரட்சி கவிஞர் பாரதிதாசன்
அம்பிகளை அடையாளம் காட்டி
தமிழ் தம்பிகளை தன்மானம் கொள்ளச்செய்த
தமிழ் தும்பி


கவிஞர் கண்ணதாசன்
இவன் முன்னே
கோப்பையில் மது வழிகிறது

இவன் இதயத்திலோ
தமிழ் பொங்கி வழிகிறது


உவமை கவிஞர் சுரதா
புதிது புதிதான எண்ண மலர்களில்

கவிதை தேன் அருந்திய

எண்ணத்துப்பூச்சி


கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்

சொற்களை செதுக்கி

மன உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும்

எழுதுகோல் சிற்பி

No comments:

Post a Comment